Wednesday, 3rd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

சென்னை மெட்ரோ ரயில் தூண்களில் சுவரொட்டிகள் ஒட்டினால் கடும் நடவடிக்கை.

அக்டோபர் 05, 2019 07:59

சென்னை: சென்னை மெட்ரோ ரயில் தூண்களில் சுவரொட்டிகள், ஸ்டிக்கர்கள் மற்றும் பதாகைகளை சட்டவிரோதமாக ஒட்டும் விளம்பரதாரர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தெரிவித்துள்ளது. 

இது தொடர்பாக அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், மெட்ரோ ரயில் திட்டத்தின், தடுப்புகள் மற்றும் பிற கட்டமைப்புகள் மீது சுவரொட்டிகள் போன்றவற்றை ஒட்டுவது மெட்ரோ ரயில்வே சட்டம் 2002இன் படி, சட்டவிரோத செயல் என தெரிவித்துள்ளது. 

ரயில் மீதோ, ரயில்வேயின் எந்த ஒரு கட்டமைப்பின் மீதோ, சுவரொட்டிகளை ஒட்டுபவர்களுக்கு 6 மாத கால வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும் என்று சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் எச்சரித்துள்ளது. 

இவ்வாறு விளம்பரம் செய்த, மெகா கிரியேட்டிவ் ஏஜென்சி, பல்லாவரம் இந்தியன் பவர் ஜிம், நவின் பிரஸ் உள்ளிட்ட 4 நிறுவனங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க உள்ளதாகவும் சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. 

தலைப்புச்செய்திகள்