Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

தந்தையை வீட்டை விட்டு வெளியேற்றிய மகள்

ஜனவரி 16, 2019 09:29

ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பாகலூர் சாலையில் உள்ள மூவேந்தர் நகர் பகுதியில் வசித்து வருபவர் தனராஜ் (வயது 80). இவர் ஓய்வு பெற்ற துணை போலீஸ் சூப்பிரண்டு ஆவார். இவருக்கு 2 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். இவர்கள் அனைவருக்கும் திருமணம் ஆகிவிட்டது. 

இவருக்கு ஏராளமான சொத்துக்கள் இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அவருக்கும், மகளுக்கும், அவரது மருமகனுக்கும் இடையே சொத்து தகராறு இருப்பதாக தெரிகிறது. 

நேற்று மகளும், மருமகனும் சேர்ந்து, சொத்து சம்பந்தமாக தனராஜிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு உள்ளனர். அப்போது ஆத்திரமடைந்த அவர்கள் தனராஜ் வசித்த வீட்டில் இருந்த கட்டில், மெத்தை உள்ளிட்ட பொருட்களை தூக்கி வெளியே வீசியதாக கூறப்படுகிறது. 

மேலும் மகள், மருமகன் மற்றும் சிலர் சேர்ந்து தனராஜை தாக்கி குண்டுக்கட்டாக தூக்கி வெளியே கொண்டு சென்று போட்டதாகவும் தெரிகிறது. அவரின் சத்தம் கேட்டு அவரது மகன் அங்கு வந்தார். அப்போது இருதரப்பினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. 

இது குறித்து ஓசூர் அட்கோ போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரியையே அவரது மகள் வீட்டை விட்டு வெளியேற்றி ரோட்டில் தூக்கிப்போட்ட சம்பவம் ஓசூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

தலைப்புச்செய்திகள்