Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

தெலுங்கானாவில் பயிற்சி விமானம் விபத்து: இருவர் உயிரிழப்பு

அக்டோபர் 06, 2019 01:55

ஐதராபாத்: தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் இருந்து 100 கி.மீ தூரத்தில் விகராபாத் மாவட்டம் சுல்தான்பூர் என்ற கிராமத்தில் பருத்தி வயல்வெளியில் பயிற்சி விமானம் ஒன்று திடீரென விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பயிற்சி விமானிகள் இருவரும் உயிரிழந்தனர். இதில் ஒருவர் பெண் என்பது குறிப்பிடத்தக்கது.

இருவரும் ராஜீவ்காந்தி ஏவியேஷன் அகாடமியின் மாணவர்கள் ஆவர். இந்த விமானம் ஐதராபாத்தில் உள்ள பேகம்பேட்டை விமான நிலையத்திலிருந்து பயிற்சிக்காக புறப்பட்டது குறிப்பிடத்தக்கது.

வயல்வெளி பகுதிகளில் காற்று பலமாக அடித்ததால் விமானம் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதாக முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதைத்தொடர்ந்து, போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

தலைப்புச்செய்திகள்