Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

விமானநிலையத்தில் ரூ.3.84 லட்சம் மதிப்புள்ள வெளிநாட்டு கரன்சி பறிமுதல்

அக்டோபர் 08, 2019 05:05

திருச்சி:  திருச்சி விமானநிலையத்தில் இருந்து மலேசியாவுக்கு கடத்த முயன்ற 3 லட்சத்து 84 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள வெளிநாட்டு கரன்சி பறிமுதல் செய்யப்பட்டது.

நேற்றிரவு திருச்சி விமான நிலையத்தில் இருந்து மலேசிய தலைநகர் கோலாலம்பூர் செல்ல இருந்த பயணிகளிடம் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அப்போது இளையான்குடியைச் சேர்ந்த ஆசாத் என்பவர் அமெரிக்க டாலர்களை தனது கைப்கையிலும், யூரோ கரன்சிகளை உருட்டி கருப்பு டேப்பால் சுற்றி தனது ஆசன வாயில் மறைத்தும் கடத்த முயன்றது தெரியவந்தது. இதனையடுத்து கரன்சிகளை பறிமுதல் செய்த சுங்கத்துறை அதிகாரிகள் ஆசாத்திடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதே போல் கோலாலம்பூரில் இருந்து திருச்சி வந்த மலிண்டா விமான பயணியிடம் 15 லட்சத்து 32 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள 50 சவரன் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இளையான்குடியை சேர்ந்த அப்துல் ரகுமான் என்பவரிடம் சந்தேகத்தின் பேரில் சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தியபோது, ஆசனவாயில் மறைத்து 50 சவரன் தங்கத்தை கடத்தியது தெரியவந்தது. இதையடுத்து தங்கத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள், விமானப்பயணியிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். 

தலைப்புச்செய்திகள்