![](admin/uploads/.60478835668a71.70755733.jpg)
Thursday, 4th July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
கடலூர்: கடலூர் முதுநகரைச் சேர்ந்த சரவணன் மகள் சபினா (வயது 21) என்ற இன்ஜினியருக்கும், சிதம்பரம் அருகே உள்ள பெரிய குப்பம் கிராமத்தைச் சேர்ந்த பாவாடை சாமி மகன் பாவேந்தன் என்பவருக்கும் கடந்த 9 மாதத்திற்கு முன்பு திருமணம் நடைபெற்றது.
அப்பொழுது நகை மற்றும் சீர்வரிசை பொருட்களை வரதட்சணையாக பெண்வீட்டார் கொடுத்தனர் மேலும் டிவி குளிர்சாதன பெட்டி உள்ளிட்ட சீர்வரிசை பொருட்களை வாங்கித் தருவதாக கூறியதாக தெரிகிறது. இந்த நிலையில் சீர்வரிசை பொருட்கள் கேட்டு சபீனா கணவர் பாவேந்தன் மற்றும் அவரது பெற்றோர் துன்புறுத்தி வந்தனர்.
இதனால் மன உளைச்சலுக்கு ஆளான சபீனா கணவர் வீட்டில் இருந்து வெளியேறி தாய் வீட்டுக்குச் சென்றதும் பாவேந்தன் விவாகரத்து நோட்டீஸ் அனுப்பியதாக தெரிகிறது இதனால் மனமுடைந்த சபீனா 30.09.2019 அன்று மாலை விஷம் குடித்தார் அதை தெரிந்து சபீனா தாயார் கடலூர் தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
மருத்துவர் ஆலோசனைப்படி இங்கு சிகிச்சை அளிக்க முடியாதபட்சத்தில் சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார் இந்தநிலையில் சிகிச்சை பலனின்றி 5.10.2019 மாலை 6 மணி அளவில் சபீனா பரிதாபமாக இறந்தார்.
பிரேத பரிசோதனைக்கு பிறகு 8.10.2919 இன்று காலை 11 மணி அளவில் OT சிங்காரத்தோப்பு மயானத்தில் அடக்கம் செய்தார்கள். இதுகுறித்து சபீனா தந்தை சரவணன் கொடுத்த புகாரின் பேரில் பாவேந்தன், அவரது தந்தை பாவாடை சாமி, தாயார் அஞ்சலை, இவர்கள் மீது கடலூர் முதுநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து குற்றவாளிகளை வலைவீசி தேடி வருகிறார்கள்.