Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கல்லூரி மாணவர்களுக்கு போதை பொருள்: சர்வதேச கும்பல் கைது

அக்டோபர் 08, 2019 02:43

நெல்லூர்: கல்லூரி மாணவ மாணவிகளை குறிவைத்து போதைப்பொருள் விற்பனை செய்த சர்வதேச கும்பலை ஆந்திர போலீசார் கைது செய்தனர். 

சென்னை, பெங்களூர், ஐதராபாத் ஆகிய நகரங்களில் செயல்படும் கல்லூரிகளை சேர்ந்த மாணவ மாணவிகளை குறிவைத்து, சர்வதேச போதை கும்பல் சுற்றி வந்துள்ளது. அந்த கும்பல், பல்வேறு வகையான போதை பொருட்களை கடத்தி அதனை ஆன்லைன் மூலம் மாணவர்களுக்கு சட்டவிரோதமாக விற்பனை செய்து வந்துள்ளனர். 

இது குறித்து தகவல் கிடைத்ததன் பேரில் விசாரணை நடத்திய நெல்லூர் போலீசார், சந்தேகத்திற்கிடமான கார் ஒன்றை மடக்கி பிடித்தனர். அதில் போதை பொருள் கடத்த முயன்றதாக சென்னையை சேர்ந்த ஒருவர் உட்பட 4 பேரை கைது செய்தனர். மேலும், அவர்களிடம் இருந்த போதை பொருட்கள் மற்றும் சொகுசு காரையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

தலைப்புச்செய்திகள்