Tuesday, 2nd July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் காவிரி ஆற்றில் குளிக்க சென்ற இளைஞர் ஒருவர் ஆற்றில் அடித்து செல்லப்பட்டு உயிரிழந்துள்ளார்.
கும்பகோணத்தில் மௌனசாமி மடம் மேதா தெருவில் வசித்து வருபவர் விஜய் (24). இவர், சொந்தமாக லோடு ஆட்டோ வைத்து தொழில் செய்து வருகிறார். இந்நிலையில் விஜய், நேற்று மேலக்காவிரியில் காவிரி ஆற்றில் குளிக்கச் சென்றபோது ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டார்.
இதையடுத்து, தகவலறிந்த தீயணைப்புத் துறையினர் நீண்ட நேரம் போராடி மனஞ்சேரி அருகே விஜயின் உடலை கைப்பற்றி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து திருவிடைமருதூர் காவல்துறை ஆய்வாளர் விஜயா விசாரணை மேற்கொண்டு வருகிறார்.