Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

லலிதா ஜுவல்லரி கொள்ளை: முக்கிய குற்றவாளி கொள்ளையன் சுரேஷ் சரணடைந்துள்ளான்

அக்டோபர் 10, 2019 06:37

திருவண்ணாமலை: லலிதா ஜுவல்லரி தேடுதல் வேட்டையின்போது, பைக்கில் இருந்து தப்பி ஓடிய முக்கிய குற்றவாளி கொள்ளையன் சுரேஷ் போலீசில் சரணடைந்துள்ளார். லலிதா ஜுவல்லரி கொள்ளை சம்பவம் நடந்து ஒரு வாரம் மேல் ஆன நிலையில், இதன் ஒட்டுமொத்த கும்பலையும் பிடிக்க போலீசார் தேடுதல் வேட்டையில் தீவிரமாக உள்ளனர்.

கடந்த வாரம், திருவாரூர் வெட்டாறு அருகில் சப் இன்ஸ்பெக்டர் பாரத நேரு வாகன சோதனையின்போது  அங்கு வந்த இருவரில் வண்டியை ஓட்டி வந்தது மணிகண்டன், பின்னாடி இருந்தது சுரேஷ். மணிகண்டனை துரத்தி பிடித்த நிலையில், சுரேஷ் போலீசாரிடம் இருந்து தப்பிவிட்டார். தப்பி ஓடிய சுரேஷ்.. பிரபல கொள்ளையன் முருகனின் சொந்தக்காரனாம். அதாவது முருகனின் தம்பி.

அதனால் சுரேஷை பிடித்து விசாரித்தால், கேங் லீடர் முருகனும் எப்படியும் சிக்குவான் என்பதால், போலீசார் படு மும்முரமாக தேடி வந்தனர். இன்னொரு பக்கம், சுரேஷின் அம்மா கனகவள்ளியிடமும் விசாரணை நடத்தினர். ஆனால், மணிகண்டன், கனகவள்ளி.. இவர்கள் இருவருமே எந்த பெரிய தகவலையும் போலீசாரிடம் சொல்லவில்லை. 

இதையடுத்து, முருகன் அண்ணன் மகன் முரளி, மணிகண்டன், சுரேஷின் தாயார் கனகவள்ளியை போலீசார் கைது செய்து 4 நாளைக்கு முன்பு ஜெயிலில் அடைத்தனர். இந்நிலையில், திருவாரூரில் தப்பி ஓடிய சுரேஷ் செங்கம் கோர்ட்டில் சரணடைந்திருக்கிறார்.

சுரேஷிடம் போலீசார் நடத்தும் விசாரணையில் எப்படியும் முருகன் சிக்குவான் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சுரேஷ் சரண் அடைந்து விட்டதால், லலிதா ஜுவல்லரி கொள்ளை தொடர்பான விசாரணை திரும்பவும் சூடு பிடித்துள்ளது.

தலைப்புச்செய்திகள்