Saturday, 28th September 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

திருச்சி நகைக் கொள்ளை: முக்கிய குற்றவாளி முருகன் சரண்

அக்டோபர் 11, 2019 12:06

பெங்களூரு: திருச்சி லலிதா  ஜுவல்லரி நகைக் கடையில் நடந்த கொள்ளையில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் முருகன், பெங்களூருவில் உள்ள மேயால் கோர்ட்டில் சரணடைந்தான்.

லலிதா ஜுவல்லரி நகைக் கடையின் திருச்சி கிளையில், கடந்த அக்., 02ல் மர்ம நபர்கள், 13 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கம் மற்றும் வைர நகைகளை கொள்ளையடித்துச் சென்றனர். இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக, மணிகண்டன் கைது செய்யப்பட்டான்.

தப்பியோடிய மற்றொரு கொள்ளையரான சுரேஷ் நேற்று (அக்., 10), திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் கோர்ட்டில் சுரேஷ் சரணடைந்தான். இந்நிலையில், முக்கிய குற்றவாளியாக கருதப்படும் முருகன், இன்று பெங்களூருவில் உள்ள மேயால் 11வது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் சரணடைந்தான்.

தலைப்புச்செய்திகள்