![](admin/uploads/.5f1a777db795d6.32387816.jpg)
Thursday, 4th July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
திருப்பூர்: திருப்பூர் மாவட்டம், கோவிந்தம் பாளையம் பகுதியை சேர்ந்த மாரிமுத்து என்பவரது மகன் வரதராஜன்(வயது 32). திருப்பூரில் பனியன் கம்பெனி வைத்து நடத்தி வருகிறார்.
தனது நண்பர்கள் 4 பேருடன் பெருந்துறையை அடுத்துள்ள துடுப்பதி பாலக்கரை, ராக்கியாவலசு பகுதியில் உள்ள எல்பீபி வாய்க்காலின் பாலத்தின் அருகே குளித்து கொண்டிருந்தபோது திடீரென தண்ணீரில் மூழ்கி இழுத்துச்செல்லப்பட்டார்.
அவருடன் இருந்தவர்கள் அவரை காப்பாற்ற முயன்றும் முடியாமல் போகவே, அக்கம் பக்கத்தினர் உதவியுடன் வாய்க்காலில் இறங்கி தேடி பார்த்து சற்று தொலைவில் இறந்த நிலையில் தண்ணீருக்குள் கிடந்த வரதராஜனை மீட்டு வெளியே கொண்டு வந்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக பெருந்துறை போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் வழக்கு பதிவு செய்து உடலை கைப்பற்றி பெருந்துறை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தார்.
மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள். இறந்து போன வரதராஜனுக்கு திருமணமாகி திலகவதி என்ற மனைவியும், சூர்யா என்ற 5 வயது மகளும் உள்ளனர்.