![](admin/uploads/.5c544cf5627421.50088703.jpg)
Thursday, 4th July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
சென்னை: நாட்டில் டிஜிட்டல் கொள்ளை சம்பவங்களை தடுக்க, வங்கி சார்பிலும், காவல்துறையினர் சார்பிலும் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
அந்த நடவடிக்கைகளில் ஒன்று தான் கே.ஒய்.சி படிவும் பூர்த்தி செய்தல். இந்த படிவத்தை பூர்த்தி செய்வதன் மூலம், பணப் பரிமாற்ற மோசடிகள், வங்கி கணக்கு மூலம், பயங்கரவாத அமைப்புகளுக்கு பணப் பரிமாற்றம் செய்யப்படுதல் உள்ளிட்ட நடவடிக்கைகள் தவிர்க்கப்படும்.
இந்த படிவத்தை பூர்த்தி செய்ய ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இதுகுறித்து அதிரடி அறிவிப்பு ஒன்றை ஆர்.பி.ஐ வெளியிட்டிருக்கிறது. அதன்படி, 2020, ஜனவரி, 1க்குள், கே.ஒய்.சி., விபரங்களை புதுப்பிக்க வேண்டும் என்றும், அவ்வாறு புதுப்பிக்காத வங்கிக்கணக்குகள் முடக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவ்வாறு முடக்கப்படும் பட்சத்தில், அந்த கணக்கில் இருந்து, நேரடியாகவோ அல்லது ஆன்லைன் மூலமோ, பணப் பரிமாற்றம் செய்ய முடியாது என, ரிசர்வ் வங்கி எச்சரித்துள்ளது.