Sunday, 29th September 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

இனி ஆயுதங்கள் கடத்தல், கள்ளத்துப்பாக்கி வைத்திருந்தால் வாழ்நாள் சிறை: மத்திய அரசு தகவல்

அக்டோபர் 13, 2019 04:38

புதுடெல்லி: கள்ளத்துப்பாக்கி வைத்திருந்தால் சாகும் வரை சிறை தண்டனை விதிக்கும் வகையில் சட்டத்தை கடுமையாக்க மத்திய அரசு முடிவெடுத்துள்ளது.

ஆயுதங்கள் சட்டத்திருத்த வரைவு மசோதாவை மத்திய உள்துறை அமைச்சகம் தயாரித்துள்ளது. அதில், சட்டவிரோதமாக ஆயுதங்களை கடத்துவது, நிகழ்ச்சி கொண்டாட்டங்களின் போது வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுடுவது, திட்டமிட்டு குற்றச்சம்பவங்களில் ஈடுபடுவது போன்ற செயல்களுக்கு தண்டனைகளை அதிகரிக்க வகை செய்யப்பட்டுள்ளது.

மேலும், ஆயுதங்களை தயாரிப்பவர்களையும் புதிய சட்டத்திருத்தத்தின் கீழ் கண்காணிக்க முடியும், சட்டவிரோதமாக வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்து உள்நாட்டில் துப்பாக்கி போன்ற ஆயுதங்களை விற்பனை செய்வோருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படுகிறது. தற்போது இந்த தண்டனை காலத்தை 14 ஆண்டுகளாக உயர்த்த புதிய சட்டத்திருத்தம் வகை செய்கிறது.

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் ஆயுதங்களுக்கான சட்டத்திருத்த புதிய மசோதாவை தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

தலைப்புச்செய்திகள்