Saturday, 28th September 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

காவேரிப்பாக்கம் அருகே மினிவேன் மீது லாரி மோதி 3 பேர் பலி

அக்டோபர் 13, 2019 05:44

காவேரிப்பாக்கம்: காவேரிப்பாக்கம் அருகே நேற்று அதிகாலை டயர் வெடித்து கட்டுப்பாட்டை இழந்த மினி வேன் மீது லாரி மோதியது. இதில் டிரைவர் உட்பட 3 பேர் இறந்தனர். வேலூரில் இருந்து  ஒரு மினிவேன் சென்னை நோக்கி சென்று கொண்டிருந்தது. வேலூர் மாவட்டம், காவேரிப்பாக்கம் அடுத்த ஓச்சேரி அருகே நேற்று அதிகாலை 3.30 மணியளவில் சென்றபோது, பின்பக்க டயர் திடீரென வெடித்து, கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடிய மினி வேன் சாலை தடுப்பு சுவரை தாண்டி எதிர்திசையில் பாய்ந்தது. அப்போது, சென்னையில் இருந்து பெங்களூரு சென்ற லாரி, கோழி வேன் மீது மோதியது. இதில் வேன் தலைக்குப்புறமாக கவிழ்ந்தது. 

இதில் வேன் டிரைவர்கள் ராணிப்பேட்டையை சேர்ந்த தினா (எ) தினகரன் (47), ஆம்பூரை சேர்ந்த அன்சர்பாஷா(25) ஆகியோர் சம்பவ இடத்திலேயும், வேனில் வந்த சென்னை வில்லிவாக்கத்தை சேர்ந்த வேன் உரிமையாளர் அக்பர்பாஷா(38) மருத்துவமனையில் இறந்துவிட்டார். ஆற்காட்டை சேர்ந்த அகமதுல்லா(27) மற்றும் லாரி டிரைவர் குடியாத்தத்தை சேர்ந்த எபினேசன்(26), செங்கல்பட்டு அடுத்த காட்டாங்குப்பத்தை சேர்ந்த லாரி கிளீனர் அஜய்(18) ஆகிய 3 பேர் சிகிச்சை பெறுகின்றனர். இதுகுறித்து  அவளூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

தலைப்புச்செய்திகள்