![](admin/uploads/.5d6a74999a9ba2.41498446.jpg)
Tuesday, 2nd July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
நாகர்கோவில்: நாகர்கோவில் பார்வதிபுரம் ராஜீவ்காந்தி நகரைச் சேர்ந்தவர் நடராஜன். இவரது மகன் லெட்சுமணன், (வயது 23). நேற்றிரவு லெட்சுமணன், நாகர்கோவில் கட்டையன் விளையைச் சேர்ந்த தனது நண்பர் விஜய் (17) என்பவருடன் மோட்டார் சைக்கிளில் நாகர்கோவிலில் இருந்து ஆரல்வாய்மொழிக்கு சென்றனர்.
தோவாளை ஆற்றுப் பாலம் அருகே உள்ள வழிச்சேரி இசக்கியம்மன் கோவில் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது மோட்டார் சைக்கிள் நிலை தடுமாறி கீழே சரிந்தது. இதில் லெட்சுமணனும், விஜய் ஆகிய இருவரும் தூக்கி வீசப்பட்டனர்.
அவர்களுக்கு தலை மற்றும் உடல் பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது. சிறிது நேரத்தில் லெட்சுமணனும், விஜய் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.
விபத்து பற்றி தகவல் அறிந்ததும், ஆரல்வாய் மொழி சப்-இன்ஸ்பெக்டர்கள் சங்கரகுமார், அஜித்குமார் மற்றும் நெடுஞ்சாலை ரோந்து போலீசாரும் அங்கு விரைந்து வந்தனர். பிணமாக கிடந்த இருவரின் உடலையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.