Sunday, 7th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

தந்தைக்கு பயந்து மாடியில் இருந்து குதித்த மாணவி: கால்முறிந்த பரிதாபம்

அக்டோபர் 13, 2019 12:15

திருச்சி:  திருச்சி மாவட்டம் பொன்மலைப்பட்டி செங்கோல் உடையார் தெருவை சேர்ந்தவர் ராக்கி. பொறியாளராக பணிபுரிந்து வரும் இவருக்கு, 16 வயதில் ஏஞ்சலின்லெமோ என்ற மகள் உள்ளார்.

தனியார் பள்ளியில் 11-ஆம் வகுப்பு படிக்கும் மாணவி, அரையாண்டு மற்றும் காலாண்டு தேர்வுகளில் மதிப்பெண் குறைவாக பெற்றதாக கூறப்படுகிறது. ஆனால், தாம் அதிகமாக மதிப்பெண் பெற்றதாக மாணவி வீட்டில் கூறியுள்ளார்.

இந்நிலையில் பள்ளியில் பெற்றோர்-ஆசிரியர் கூட்டம் நடைபெற்றுள்ளது. இந்த கூட்டத்திற்கு அனைவரின் பெற்றோரும் அவசியமாக கலந்துக்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது.

இதனால் மிகவும் பயத்தில் இருந்த மாணவி, அந்த கூட்டம் நடைபெற்றபோது பள்ளியின் மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்துகொள்ள முடிவு செய்துள்ளார். அங்கிருந்து கீழே குதித்ததில், மாணவியின் கால்கள் முறிந்துவிட்டது.

இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர் மற்றும் சிறுமியின் தந்தை, மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

தலைப்புச்செய்திகள்