![](admin/uploads/.61666aafe0e024.86001579.jpg)
Friday, 5th July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
மதுரை: மதுரை மாவட்டம் விக்கிரமங்கலம் அருகே ஆயிரத்து 200 ஆண்டுகள் பழமையான மதுரோய ஈஸ்வரமுடையார் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் பக்தர்கள் தரிசிப்பதற்காக உற்சவ மூர்த்தி ஈஸ்வரமுடையார், சிவனேசவல்லி ஆகிய இரண்டு ஐம்பொன் சிலைகள் வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் நேற்று இரவு கோயிலின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்த கொள்ளையர்கள் இரு ஐம்பொன் சிலைகளையும் திருடிச் சென்றுள்ளனர்.
இன்று காலை வழக்கம் போல் நடை திறக்க சென்றபோது கோயில் பூட்டு உடைக்கப்பட்டு சிலைகள் திருடப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்த கோவில் பூசாரி, இது பற்றி போலீசாருக்கு தகவல் கொடுத்தார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், கொள்ளையர்களை தேடி வருகின்றனர். திருட்டு போன சிலைகளின் மொத்த எடை சுமார், 48 கிலோ என தெரிவிக்கப்பட்டுள்ளது.