![](admin/uploads/.6224ac52d321e9.45516968.jpg)
Thursday, 4th July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
மும்பை: மும்பையில் ஓடும் ரயிலில் செல்போன் திருடியவரை போலீசாரும், செல்போனின் உரிமையாளரும் விரட்டிச் சென்று பிடித்தனர்.
மும்பரா ரயில் நிலையத்தில் சென்று கொண்டிருந்த ரயிலில் பயணி ஒருவரின் செல்போனை திருடிய இளைஞர், நடைமேடையில் குதித்து தப்ப முயன்றுள்ளார்.
செல்போனை பறிகொடுத்த பயணியும், கீழே குதித்து, திருடிய இளைஞரை துரத்திச் சென்றுள்ளார். பாதுகாப்புப் பணியில் இருந்த ரயில்வே காவலரும் விரட்டிச் சென்றார். பின்பு, சிறிது நேரத்தில் அந்த இளைஞர் பிடிபட்டார்.
இந்த பரபரப்பான காட்சிகள் ரயில் நிலையத்தில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.