Wednesday, 3rd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

சீமான் மீண்டும் சர்ச்சை பேச்சு: தமிழக அமைச்சர்களை இழிவுபடுத்தி விமர்சனம்

அக்டோபர் 16, 2019 05:22

தூத்துக்குடி: முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை செய்யப்பட்டதை நியாயப்படுத்தும் வகையில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அவரது கருத்துக்கு பல்வேறு தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். அவரை தேசத்துரோக சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என காங்கிரஸ் வலியுறுத்தி உள்ளது. 

இந்த பரபரப்பு அடங்குவதற்குள் மீண்டும் சர்ச்சையாக பேசியிருக்கிறார் சீமான். இந்த முறை தமிழக அமைச்சர்களையும், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவையும் இழிவுபடுத்தும் வகையில் கருத்து தெரிவித்தார்.

தூத்துக்குடி துப்பாக்கி சூடு விவகாரம் தொடர்பாக அருணா ஜெகதீசன் ஆணையத்தில் ஆஜராவதற்காக சீமான் இன்று தூத்துக்குடி வந்தார். 

அப்போது அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “அலிபாபாவும் 40 திருடர்களும் என்பதுபோல, அம்மாவும் 40 திருடர்களும் என்பதுபோல தமிழக அமைச்சர்கள் உள்ளனர். இப்போது அம்மா இல்லை, திருடர்கள்தான் இருக்கிறார்கள்” என்றார். இந்த பேச்சு அதிமுகவினரிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது

தலைப்புச்செய்திகள்