Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

நீட், 4250 பேரின் கைரேகை ஒப்படைக்கவும்: சென்னை ஐகோர்ட்

அக்டோபர் 16, 2019 08:26

சென்னை: நீட் ஆள்மாறாட்ட வழக்கில் நடப்பு கல்வி ஆண்டில் எம்.பி.பி.எஸ்., சேர்ந்த 4250 மாணவ, மாணவிகளின் கைரேகை பதிவுகளை ஒப்படைக்க சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டது.

நீட் ஆள்மாறாட்ட வழக்கில், சிபிசிஐடி அறிக்கை தாக்கல் செய்தது. அதில், தமிழகத்தை சேர்ந்தவர்கள், பிற மாநிலங்களிலும் தேர்வு எழுதியுள்ளனர். இந்த விவகாரத்தில் 19 பேர் மீது சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதுவரை 4 மாணவர்கள் உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டது.

இதனை விசாரித்த நீதிபதிகள், இது மாநில அளிவிலான முறைக்கேடு இல்லை, இது தேசிய அளவிலான முறைக்கேடு. பிற மாநில தேர்வு மையங்களில் நீட் எழுதியிருப்பதால் ஏன் இந்த வழக்கை சிபிஐ விசாரிக்கக்கூடாது என கேள்வி எழுப்பினர். மேலும், நடப்பு கல்வி ஆண்டில் எம்.பி.பி.எஸ்., சேர்ந்த 4250 மாணவ, மாணவிகளின் கைரேகை பதிவுகளை சிபிசிஐடியிடம் ஒப்படைக்க தமிழக அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

தலைப்புச்செய்திகள்