Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

மராட்டியம், அரியானாவில் நாளை சட்டசபை தேர்தல்

அக்டோபர் 20, 2019 01:17

புதுடெல்லி: பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. 288 தொகுதிகள் கொண்ட மராட்டியம்  மாநிலத்தில் 235 பெண்கள் உள்பட 3 ஆயிரத்து 237 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இங்கு ஆளும் பாஜக- சிவசேனா கூட்டணிக்கும், காங்கிரஸ்- தேசியவாத காங்கிரஸ் கூட்டணிக்கும் இடையே நேரடிப் போட்டி நிலவுகிறது.  

இதேபோல, 90 தொகுதிகளை கொண்ட அரியானா தேர்தல் களத்தில், 105 பெண்கள் உள்பட ஆயிரத்து 169 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இங்கு ஆளும் பாஜக, காங்கிரஸ் ஜே.​ஜே.பி கட்சிகளிடையே கடும் போட்டி நிலவுகிறது. 

இந்நிலையில் இருமாநிலங்களிலும், தேர்தலையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. நாளை பதிவாகும் வாக்குகள், வருகிற 24ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவு அறிவிக்கப்படவுள்ளது.  இத்துடன் மாநிலங்களில் காலியாக உள்ள 64 சட்டசபை தொகுதிகளிலும் தேர்தல் நடக்கிறது. 

தலைப்புச்செய்திகள்