Wednesday, 3rd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

அரசு மருத்துவமனையில் பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு

அக்டோபர் 20, 2019 01:43

நாகர்கோவில்: நாகர்கோவில் அருகே கட்டையன் விளை பகுதியை சேர்ந்த ஆனந்த், கன்னியாகுமரி அரசு மருத்துவமனையில் காவலாளியாக பணிபுரிந்து வருகிறார்.அந்த மருத்துவமனையில், சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த ஒரு சிறுவனை அவனது தாய் உடன் இருந்து கவனித்து வந்துள்ளார். 

இந்நிலையில் நேற்று நள்ளிரவில் மருத்துவமனை வளாகத்தில்  சிறுவனின் தாய்க்கு காவலாளி ஆனந்த் பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. அந்த பெண்ணின் புகாரை தொடர்ந்து ஆனந்தை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

தலைப்புச்செய்திகள்