![](admin/uploads/.650a91b8e9f451.26697923.jpg)
Tuesday, 2nd July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
திருச்சி: திருச்சி திருவெறும்பூர் அருகே வயலில் டிராக்டர் மூலம் உழவு பணியில் ஈடுபட்டிருந்த விவசாயியை இடி தாக்கியதில் பரிதாபமாக உயிரிழந்தார்
புதுக்கோட்டை மாவட்டம் ஊரத்திபட்டியை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது45). விவசாய கூலி தொழிலாளி. இவர் திருவெறும்பூர் அருகே உள்ள பழங்கனான்குடியில் உள்ள ஒருவரது வயலில் டிராக்டர் மூலம் உழவு பணியில் நேற்று ஈடுபட்டார். அப்போது அங்கு கன மழை பெய்தது. திடீரென இடி, மின்னல் தாக்கியதில் விவசாயி ராஜேந்திரன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து தகவல் அறிந்ததும் துவாக்குடி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அங்கு ராஜேந்திரனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக துவாக்குடி அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து துவாக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்..
இதேபோல் திருவெறும்பூர் அருகே உள்ள ஒட்டக்குடி காவிரி ஆற்று பகுதியில் காவிரியாற்றில் சுமார் 50வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத ஆண் பிணம் அழுகிய நிலையில் கிடந்தது.
விபரமறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஆற்றில் பிணமாக மிதந்தவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுபற்றி போலீசார் விசாரித்து வருகிறார்கள்.