Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ரவுடி கொலை: கள்ளக்காதலி கணவருடன் கைது

அக்டோபர் 21, 2019 08:11

சென்னை: சென்னை பாடி கலைவாணர் நகரில் வசித்து வந்தவர் சுரேஷ் (31). ரவுடியான இவன் அப்பகுதியில் உள்ள பொன்னியம்மன் கோவில் தெரு ஸ்டேண்டில் ஆட்டோ ஓட்டி வந்தார். கடந்த 2005-ம் ஆண்டு தனது தாய் மாமாவை வெட்டி கொலை செய்த சுரேஷ் மீது கொலை முயற்சி, அடிதடி வழக்குகளும் உள்ளன. 

பாடி கலைவாணர் நகரில் உள்ள ஸ்டேண்டுக்கு வந்து தினமும் சுரேஷ் ஆட்டோ ஓட்டி வந்தார். இந்த நிலையில் கடந்த 14-ந்தேதி திடீரென சுரேஷ் காணாமல் போனார். பல இடங்களில் தேடிப் பார்த்தும் சுரேசை கண்டு பிடிக்க முடியவில்லை. 

இதையடுத்து கொரட்டூர் போலீஸ் நிலையத்துக்கு சென்று கலா புகார் செய்தார். போலீசார் உரிய நடவடிக்கை எடுக்காததால், அம்பத்தூர் துணை கமி‌ஷனர் ஈஸ்வரனை சந்தித்து முறையிட்டார். சுரேஷ் மாயமானதாக வழக்குப் பதிவு செய்த போலீசார் விசாரைணையை தீவிரப்படுத்தினர்.

சுரேசின் ஆட்டோ ஸ்டேண்ட் இருக்கும் இடம் அருகே டிபன் கடை நடத்தி வரும் கார்த்திகா என்ற பெண்ணுக்கும், சுரேசுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இது பின்னர் கள்ளக்காதலாக மாறி சுரேஷ் அடிக்கடி கார்த்திகாவின் வீட்டுக்கு சென்று வந்துள்ளார். பல நேரங்களில் போதையில் தகராறு செய்துள்ளார்.

இது தொடர்பாக போலீசார் கள்ளக்காதலி கார்த்திகா, அவரது கணவர் ஜெயக்கொடி  ஆகியோரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர்.

கடந்த 14-ந்தேதி அன்று சுரேஷ், போதையில் கார்த்திகாவின் வீட்டுக்கு சென்று தகராறு செய்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த ஜெயக்கொடியும் கார்த்திகாவும் சேர்ந்து சுரேசை தாக்கினர். வீட்டிலேயே கை, கால்களை கட்டிப்போட்டு வைத்தனர்.

போதையில் மயங்கிய நிலையில் இருந்த சுரேசை ஜெயக்கொடியும் அவரது நண்பர்களும் சேர்ந்து காரில் கடத்திச் சென்றனர். செங்குன்றம் அருகில் உள்ள விளாங்காடுப்பாக்கத்தில் சாலையோரமாக புதர் மண்டி காணப்பட்ட இடத்தில் வைத்து சுரேசின் கழுத்தை அறுத்து கொலை செய்தனர். பின்னர் உடலை புதரில் வீசி விட்டு துண்டிக்கப்பட்ட தலையை அருகில் உள்ள கால்வாயில் தூக்கி போட்டு விட்டு தப்பினர்.

ரவுடி சுரேஷ் கொலை தொடர்பாக உதவி கமி‌ஷனர் கண்ணன் தலைமையிலான தனிப்படையினர் துப்பு துலக்கி, கள்ளக்காதலி கார்த்திகா, கணவர் ஜெயக்கொடி, நண்பர்களான ராஜா, சுந்தரகாண்டான் ஆகிய 4 பேரை கைது செய்தனர்.

அனைவரையும் இன்று கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கிறார்கள். கள்ளக்காதல் விவகாரத்தில் ரவுடி தீர்த்துக்கட்டப்பட்ட சம்பவம் பாடி, கொரட்டூர், செங்குன்றம் பகுதிகளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தலைப்புச்செய்திகள்