Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

பாகிஸ்தான் மீண்டும் அத்துமீறல்: எல்லையில் பதற்றம்

அக்டோபர் 22, 2019 01:26

ஜம்மு-காஷ்மீர்: ஜம்மு-காஷ்மீரின், பூஞ்ச் மாவட்டத்திற்குட்பட்ட மெந்தார் பகுதியில், பாகிஸ்தான் ராணுவம், இன்று பகலில், துப்பாக்கிச்சூடு நடத்தியது. சுமார் ஒரு மணி நேரம் துப்பாக்கிச்சூடு நடத்திய பாகிஸ்தான், பிற்பகல் 2 மணியளவில், நிறுத்தியது. ஞாயிற்றுக்கிழமையன்று, அத்துமீறியபோது, இந்திய ராணுவத்தின் அதிரடியால், உயிரிழப்பு உள்ளிட்ட பலத்த சேதங்களை பாகிஸ்தான் எதிர்கொண்டது.

இதையடுத்து, இந்திய ராணுவம் தாக்குதல் நடத்த வேண்டாம் என பாகிஸ்தான் வேண்டுகோள் விடுத்திருந்த நிலையில், இன்று மீண்டும் அத்துமீறியிருக்கிறது. இந்த துப்பாக்கிச்சூட்டில், பொதுமக்கள் இருவர் படுகாயமடைந்ததாக கூறியிருக்கும் ராணுவ வட்டாரங்கள், பாகிஸ்தானுக்கு தகுந்த பதிலடி கொடுக்கப்பட்டதாக தெரிவித்திருக்கின்றன.

பாகிஸ்தான் ராணுவம், இன்று மீண்டும், அத்துமீறி தாக்குதல் நடத்தியிருப்பதால், எல்லையில் பதற்றம் ஏற்பட்டிருக்கிறது.

தலைப்புச்செய்திகள்