Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

போலீஸ் விரட்டியதில் கிணற்றில் விழுந்து ரவுடி உயிரிழப்பு

அக்டோபர் 23, 2019 11:32

மதுரை: மதுரை சோலை அழகுபுரம் கிராமத்தை சேர்ந்தவர் பாண்டி. அவருடைய மகன் பாட்டில் மணி (வயது 32). பிரபல ரவுடி. இவரது கூட்டாளி திருநெல்வேலி காழியூத்து கிராமத்தை சேர்ந்த குண்டு கார்த்திக் (35). இவர்கள் 2 பேர் மீதும் சென்னை ரெட்ஹில்ஸ் போலீசில் கொலை, கொள்ளை, கஞ்சா உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளது.

சென்னை போலீசார் பாட்டில் மணி, குண்டு கார்த்திக்கை தேடி வந்தனர். அவர்கள் 2 பேரும் 10 பேர் கொண்ட கூலிப்படை கும்பலுடன் காஞ்சிபுரத்தில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அவர்களை பிடிக்க காஞ்கிபுரம் சிறப்பு படை போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

இது குறித்து திருவண்ணாமலை மாவட்ட போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் கொடுத்த தகவல்படி வெம்பாக்கம் அடுத்த வடமாவந்தல் பகுதியில் தூசி போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

இதையறிந்த ரவுடி கும்பல் காரில் இருந்து குதித்து தப்பி ஓடினர். போலீசார் அவர்களை விரட்டி சென்றனர். குண்டு கார்த்திக் மட்டும் போலீசாரிடம் சிக்கினார். மற்றவர்கள் தப்பி ஓடிவிட்டனர்.

தப்பி ஓடியவர்களை போலீசார் தேடி வந்த நிலையில் வடமாவந்தல் கிராமத்தில் கன்னியப்பன் என்பவரது வயல்வெளி தரை கிணற்றில் பாட்டில் மணி இறந்து கிடந்தது தெரியவந்தது. போலீசார் துரத்தி வந்த போது கிணற்றில் தவறி விழுந்து பாட்டில் மணி இறந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. அவரது உடல் செய்யாறு அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோனைக்கு வைக்கப்பட்டுள்ளது.

தலைப்புச்செய்திகள்