Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

பிரபஞ்ச அழகியாக சென்னை பெண் அக்‌ஷரா ரெட்டி தேர்வு

அக்டோபர் 24, 2019 04:35

சென்னை: ‘மிஸ் சூப்பர் குளோப்’ பிரபஞ்ச அழகி போட்டியின் இறுதி நிகழ்வு துபாயில் சில நாட்களுக்கு முன்பு நடந்தது. இந்தியா உள்பட 22 நாடுகளை சேர்ந்த அழகிகள் போட்டியாளர்களாக பங்கேற்றனர்.

பல்வேறு சுற்றுகள் வாரியாக அழகிகள் தேர்வு செய்யப்பட்டனர். அதன் அடிப்படையில் இந்தியா சார்பில் பங்கேற்ற சென்னையை சேர்ந்த பெண் அக்‌ஷரா ரெட்டி பிரபஞ்ச அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

பிரபஞ்ச அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்ட அக்‌ஷரா ரெட்டி சென்னையில் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

‘மாடலிங்’ என்பது சிறுவயதில் இருந்தே என்னுடைய உணர்வாக இருந்தது. விளையாட்டு துறையில் சாதிப்பவர்களை பார்த்து, நாமும் ஏதாவது சாதித்து நாட்டுக்கு பெருமை சேர்க்கவேண்டும் என்பது என்னுடைய லட்சியம். அதே சமயத்தில் ‘மாடலிங்’ துறையில் இருக்கும் என்னால் நாட்டுக்கு பெருமை சேர்க்க முடியுமா? என்ற கேள்வி எழுந்துகொண்டே இருந்தது.

இதற்காக நான் கடுமையாக உழைத்துக்கொண்டே இருந்தேன். ‘மிஸ் சூப்பர் குளோப்’ பட்டம் வென்றது மிகவும் பெருமையாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கிறது. தாய்மை குறித்து நான் கூறிய பதில் எனக்கு புள்ளிகளை ஈட்டிக் கொடுத்தது.

இவ்வாறு அவர் கூறினார்.

தலைப்புச்செய்திகள்