Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

வேதாந்தா அகடாமி பள்ளியில் முதலாமாண்டு ஆண்டு விழா

பிப்ரவரி 28, 2019 01:13

மதுரவாயல்: சென்னை வானகரத்தில் அமைந்துள்ள வேதாந்தா அகடாமி சிபிஎஸ்இ பள்ளியில் முதலாமாண்டு ஆண்டு விழா ‘விருக்ஷா’ என்ற தலைப்பில் சிறப்பாக நடைபெற்றது.  

இவ்விழாவிற்கு கிராமப்புறத் தொழில் மற்றும் மேம்பாட்டு அமைச்சர் பெஞ்சமின் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு விழாவினைத் தொடக்கி வைத்தார். மேலும் வேதாந்தா பள்ளி தலைவர் இராமதாஸ், பள்ளி இயக்குனர் சந்தீப் வாசு மற்றும் பள்ளி கௌரவ குழு உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டு விழாவினைச் சிறப்பித்தனர். 

‘விருக்ஷா’ என்ற தலைப்பில் மனம் மற்றும் உடலினை ஒருநிலைப்படுத்தும் 
வகையில் சமூக மற்றும் கலாச்சார பண்பாட்டின் அடிப்படையில் மாணவர்கள் நடனம் 
மற்றும் நாடகத்தினை நடத்தினர். இவ்விழாவில் வண்ண விளக்குகளாலும் பெற்றோர் மற்றும் பெருமக்கள் மாணவர்கள் கூட்டத்தினாலும் அரங்கு வண்ணமயமாய் ஜொலித்தது என்பது குறிப்பிடத்தக்கது. 

மேலும் பள்ளி இயக்குனர் சந்தீப் வாசு, பள்ளி முதல்வர் பிரதீபா ஆகியோர் கல்வியாண்டில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்களையும் மற்றும் பரிசுக்கோப்பைகளையும் வழங்கி கௌரவித்தனர்.

தலைப்புச்செய்திகள்