Wednesday, 3rd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

பாராளுமன்ற தேர்தல்: பஞ்சாப் மாநிலத்தில் ராகுல் பிரச்சாரம்

மார்ச் 01, 2019 10:54

மோகா: பாராளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், பஞ்சாப் மாநிலத்தில் வரும் 7-ம் தேதி காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி, பிரச்சாரத்தை தொடங்கி வைக்க உள்ளார்.  

பாராளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அரசியல் கட்சிகள் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கி உள்ளன. இந்நிலையில் பஞ்சாப் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியின் பிரச்சாரம் வரும் 7ம் தேதி தொடங்குகிறது. மோகா- லூதியானா நெடுஞ்சாலையில் உள்ள கில்லி சாஹ்லான் கிராமத்தில் இருந்து பிரச்சாரம் துவங்குகிறது என பஞ்சாப் மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஜாகர் தெரிவித்துள்ளார்.  

கில்லி சாஹ்லான் கிராமத்தில் பிரச்சாரம் நடைபெற உள்ள இடத்தை பார்வையிட்ட பின்னர் அவர் இந்த தகவலை தெரிவித்தார். இந்த பிரச்சாரத்தினை காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி துவக்கி வைக்க உள்ளார் எனவும் அவர் தெரிவித்தார்.  

காங்கிரஸ் எம் எல் ஏ க்கள் சுக்ஜீத் சிங் காகா தரம்கோட், டாக்டர் ஹர்ஜோட் கவால், தர்ஷன் சிங் பிரார் மற்றும்  மூத்த காங்கிரஸ் தலைவர் மற்றும் பிபிசி பொதுச் செயலாளர் தாரா சிங் சாந்து ஆகியோர் உடன் இருந்தனர்.  

இதனையடுத்து ஜாகர், காங்கிரஸ் கட்சியின் அனைத்து எம்எல்ஏக்களுடன் தேர்தல் பிரச்சாரம் குறித்து கலந்துரையாடினார். பின்னர் மோகா துணை கமிஷனருடன் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை நடத்தினார். 

தலைப்புச்செய்திகள்