Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ட்விட்டருக்கு குட்-பை சொன்ன குஷ்பு

நவம்பர் 12, 2019 02:10

சென்னை: குஷ்பு தனது ட்விட்டர் கணக்கை Deactivate செய்துள்ளார். 1990-களில் தமிழ் சினிமாவில் மெகா ஹீரோயினாக வலம் வந்த குஷ்பு, தற்போது சின்னத்திரைகளில் நடித்து வருகிறார். அது மட்டுமல்லாமல் 2014ம் ஆண்டு முதல் காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளராகவும் செயல்பட்டு வருகிறார்.

சமூக வலைதளமான ட்விட்டரில் மிகவும் ஆக்டிவாக இருந்த குஷ்பு, கட்சி தொடர்பான விவரங்களையும், அரசியல் விமர்சனங்களையும் பதிவிட்டு வந்தார். 2010 ஆண்டு தனது ட்விட்டர் கணக்கை தொடங்கியது முதல் தற்போது வரை 12 லட்சம் ஃபாலோயர்களை கொண்ட குஷ்பு இன்று திடீரென தனது கணக்கை deactivate செய்துள்ளார். 

ட்விட்டர் பார்க்கும் போது தான், தானாக இல்லை என்றும், ஒரு சில காரணங்களால் எல்லோருக்கும் பதில் அளிக்க முடியவில்லை என்றும் குஷ்பு தெரிவித்துள்ளார். பிரச்சனைகளுக்கு பயந்து தான் ட்விட்டரில் இருந்து வெளிவரவில்லை என்று தெரிவித்த குஷ்பு, ட்விட்டரில் செலவிடும் நேரத்தின் காரணமாக தன் பிள்ளைகளுடன் நேரம் செலவிட முடியவில்லை என்று வருத்தம் தெரிவித்தார்.

மீண்டும் ட்விட்டர் கணக்கை ஆக்டிவேட் செய்வது குறித்து முடிவு செய்யவில்லை என கூறிய குஷ்பு, தற்போதைக்கு ட்விட்டர் வர விருப்பம் இல்லை எனவும் விளக்கம் அளித்துள்ளார். குஷ்பு 2017ம் ஆண்டு ட்விட்டர் கணக்கை deactivate செய்துவிட்டு மீண்டும் சில மாதங்களுக்கு பிறகு activate செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தலைப்புச்செய்திகள்