Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ரூ.30 ஆயிரத்துக்காக 9 வயது மகளை திருமணம் செய்து கொடுக்க முயன்ற தாய் கைது

நவம்பர் 13, 2019 10:14

அவுரங்காபாத்: அவுரங்காபாத் அருகே ரூ.30 ஆயிரம் பணத்துக்காக 9 வயது மகளை வாலிபருக்கு திருமணம் செய்து கொடுக்க முயன்ற தாய் உள்பட 6 பேரை போலீசார் கைது செய்தனர்.

அவுரங்காபாத் மாவட்டம் மஜால்காவ், புலேநகர் பகுதியை சேர்ந்த 9 வயது சிறுமிக்கு திருமணம் நடை பெற உள்ளதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் அங்கு விரைந்து சென்றனர். அப்போது, அங்கு சிறுமிக்கு திருமணம் நடைபெற இருந்தது உறுதி செய்யப்பட்டது.

அஷாமதி கோலப் என்ற பெண் ரூ.30 ஆயிரம் பணத்துக்காக அவரது 9 வயது மகளை தனது தோழி ஊர்மிளா யாதவின் 20 வயது மகன் சந்தோசுக்கு திருமணம் செய்ய முடிவு செய்து இருந்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் பணத்துக்காக சிறுமிக்கு திருமணம் செய்ய ஏற்பாடு செய்து இருந்த தாய் அஷாமதி கோலப் மற்றும் அவரது தோழி ஊர்மிளா யாதவ், மணமகன் சந்தோஷ் மற்றும் உறவினர்களான மங்கல் பாய், அஜிமோதீன் சேக், ஜாபர் இஸ்மாயில் ஆகிய 6 பேரை கைது செய்தனர்.

பணத்துக்காக பெற்ற தாயே 9 வயது சிறுமிக்கு திருமணம் செய்து வைக்க முயன்ற சம்பவம் அவுரங்காபாத் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

தலைப்புச்செய்திகள்