Friday, 5th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

அபிநந்தன் இந்தியா வந்தார்

மார்ச் 01, 2019 02:40

ஜம்மு - காஷ்மீர் மாநிலம், புல்வாமாவில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, பாகிஸ்தானின், பாலகோட்டில் உள்ள பயங்கரவாத முகாம் மீது, இந்திய விமான படை தாக்குதல் நடத்தியது. இதையடுத்து, பாகிஸ்தான் போர் விமானங்கள், நேற்று முன்தினம், இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயற்சித்தன. 

பாக்., விமானங்களை விரட்டிச் சென்ற, இந்திய விமானப்படையின், 'மிக் - 21' ரக விமானம், பாக்.,எல்லைக்குள் விழுந்தது. விமானத்தில் இருந்த, தமிழகத்தைச் சேர்ந்தவரும், இந்திய விமானப் படையின் விங் காமாண்டருமான, விமானி அபிநந்தன், பாகிஸ்தான் ராணுவத்தால் சிறைபிடிக்கப் பட்டார். 

அபிநந்தனை இன்று (மார்ச் 1) அன்று விடுதலை செய்வோம் என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அறிவித்தார். இதனையடுத்து, ராவல் பிண்டியிலிருந்து லாகூர் வரை விமானம மூலம் அழைத்து வரப்பட்ட அபிநந்தன்,அங்கிருந்து வாகா எல்லைக்கு கார் மூலம் அழைத்து வரப்பட்டார். பின்னர், இந்திய அதிகாரிகளிடம், அபிநந்தனை பாகிஸ்தான் ராணுவத்தினர் ஒப்படைத்தனர். அவரை இந்திய அதிகாரிகள் வரவேற்றனர். அவருக்கு, இந்திய டாக்டர்கள், குழுவினர் மருத்துவ பரிசோதனை நடத்தவுள்ளனர். 

எல்லையிலிருந்து அமிர்தசரஸ் அழைத்து செல்லப்படும் அபிநந்தன், பின்னர் விமானம் மூலம் டில்லி அழைத்து செல்லப்பட உள்ளார். அபிநந்தனை வரவேற்க ஏராளமான பொது மக்கள் வாகா அட்டாரி எல்லையில் கூடினர். தேசிய கொடியுடன் மேளதாளம் முழங்கி, பட்டாசு வெடித்து கொண்டாடி வருகின்றனர்.

தலைப்புச்செய்திகள்