![](admin/uploads/.5fa8d8791a6015.77570345.jpg)
Tuesday, 2nd July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
சென்னை: ஆவின் பால் பாக்கெட்களில் விரைவில் திருக்குறள் அச்சிடப்படும் என தமிழக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார். இதற்காக முதல்வரின் ஒப்புதலை பெற உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஆவின் பால் பாக்கெட்களில் திருக்குறளை அச்சிட்டு வழங்குவதன் மூலம் ஒவ்வொறு வீட்டிலும் திருக்குறளை கொண்டு சேர்க்க முடியும் எனவும், இதற்கு செயல் வடிவம் கொடுக்க வேண்டும் என தமிழக பா.ஜ., ஐடி பிரிவு தலைவர் நிர்மல் குமார் டுவிட்டர் மூலம் அமைச்சருக்கு கோரிக்கை விடுத்தார்.
இதற்கு டுவிட்டரில் பதிலளித்த அமைச்சர், விரைவில் ஆவின் பால் பாக்கெட்களில் திருக்குறள் அச்சிடப்படும் என தெரிவித்துள்ளார்.