Saturday, 28th September 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ரெயில் மோதாமல் இருக்க பாலத்தில் இருந்து குதித்த மாணவி பலி

நவம்பர் 15, 2019 06:22

கேரளா: கேரள மாநிலம் வடகராவை சேர்ந்தவர் அனில்குமார். அரசு மருத்துவமனை ஊழியர். இவரது மகள் ஆதித்யா (வயது 13). அரசு பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தார்.

சம்பவத்தன்று காலை வழக்கம்போல் பள்ளிக்கு நடந்துசென்றார். அங்குள்ள ரெயில்வே தண்டவாளத்தை கடக்க முயன்றபோது மங்களாபுரத்தில் இருந்து கோவைக்கு ஒரு ரெயில் வந்தது.

இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த ஆதித்யா உயிர் தப்பிக்க பாலத்தில் இருந்து குதித்தார். இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு அங்குள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிசிச்சை அளிக்கப்பட்டது.

பின்னர் மேல் சிகிச்சைக்காக கோழிக்கோடு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிசிச்சை பலனின்றி ஆதித்யா பரிதாபமாக இறந்தார். இது குறித்து வடகரா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்துயுள்ளது.

தலைப்புச்செய்திகள்