Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

சென்னை: விமான நிலையத்தில் ஏ.டிஎம்கள் மூடல்

நவம்பர் 16, 2019 03:56

சென்னை: சென்னை விமான நிலையத்தில் வங்கி ஏ.டி.எம்கள் திடிரென மூடப்பட்டுள்ளதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாயினர்.

சென்னை விமான நிலையத்தில் பல்வேறு வங்கிகளின் சார்பில் ஏ.டி.எம்.கள் வைக்கப்பட்டு உள்ளன. இதன்மூலம் பொதுமக்கள் மற்றும் விமானநிலைய ஊழியர்கள் பணம் எடுத்து வந்தனர். 

இந்நிலையில் ஏ.டி.எம் அமைந்துள்ள இடத்திற்கான வாடகை கட்டணம் அதி்கரித்து உள்ளதாக கூறப்படுகிறது. இதனையடுத்து கனரா வங்கி மற்றும் இந்தியன் வங்கி உள்ளிட்ட வங்கி ஏ.டிஎம்கள் மூடப்பட்டதாக கூறப்படுகிறது. 

தலைப்புச்செய்திகள்