Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

அதிகாலையில் ஊருக்குள் புகுந்த 5 காட்டு யானைகள்

நவம்பர் 16, 2019 07:07

கோவை: கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் அருகே நாய்க்கன்பாளையம் பகுதியில் ஐந்து காட்டு யானைகள் இன்று அதிகாலை ஊருக்குள் புகுந்ததால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில் இருந்து 50க்கு மேற்பட்ட யானைகள் அவ்வப்போது குடியிருப்பு பகுதிகள், விவசாய நிலங்களில் புகுந்து சேதம் விளைவித்து வருகின்றன. இந்நிலையில் 5 காட்டு யானைகள் உணவு தேடி நாய்க்கன்பாளையம் பகுதியில் புகுந்தன.

தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் பட்டாசுகளை வெடித்து யானைகளை வனப்பகுதிக்குள் விரட்ட முயற்சித்தனர். அப்போது அப்பகுதியில் இருந்த மின்சார டிரான்ஸ்பார்மர் மீது யானைகள் மோதி சென்றதால் மின்சார கம்பிகள் ஒன்றோடு ஒன்று உரசி தீப்பொறி ஏற்பட்டது.

தலைப்புச்செய்திகள்