Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

சேலம்: இரு சக்கர வாகனம் மீது பேருந்து மோதிய விபத்தில் 3 பேர் பலி

நவம்பர் 17, 2019 04:20

சேலம்: சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே இரு சக்கர வாகனம் ஒன்றில் 3 பேர் பயணம் செய்து கொண்டிருந்தனர். இந்நிலையில், விரகனூர் பகுதியில் இருந்து வந்த தனியார் பேருந்து ஒன்று அவர்களது வாகனம் மீது மோதி விட்டு சென்றது.

இந்த விபத்தில் ஒரே குடும்பத்தினை சேர்ந்த சந்திரா, சக்திவேல் மற்றும் நித்யா ஆகிய 3 பேர் பலியாகி உள்ளனர்.  இதுபற்றி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தலைப்புச்செய்திகள்