![](admin/uploads/.60d95d09089b78.48509423.jpg)
Tuesday, 2nd July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் தியாகதுருகத்தில் அரசுப்பேருந்தில் ஆபத்தான முறையில் மாணவர்கள் பயணம் செய்யும் அவலம் நிலவுகிறது.தியாக துருகத்தில் இருந்து மணலூர் பேட்டைக்கு தினமும் 2 முறை மட்டுமே அரசுப்பேருந்து இயக்கப்படுவதாக கூறப்படுகிறது.
இதனால் மணலூர் பேட்டையில் இருந்து தியாக துருகத்துக்கு தினமும் பள்ளி மாணவர்கள் பேருந்தின் பின்பகுதியில் தொங்கியபடியும், மேற்கூரையில் அமர்ந்தும் ஆபத்தான முறையில் பயணிக்கின்றனர். சில மாணவர்கள் ஆபத்தை உணராமல் படிக்கட்டுகளில் தொங்கியபடி பயணம் செய்கின்றனர்.
பள்ளி மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு கூடுதல் பேருந்துகளை இயக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.