![](admin/uploads/.5c85f516ea7154.06776020.jpg)
Tuesday, 2nd July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
தேனி: தேனி மற்றும் திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் 3 பேர் தீக்குளிக்க முயற்சி செய்தனர். தேனி கலெக்டர் அலுவலகத்தில் மஞ்சுநாயக்கன்பட்டி ஈஸ்வரி, போடியை சேர்ந்த கண்ணப்பன் தனித்தனியாக பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஈஸ்வரியின் நிலத்தை யாரோ அபகரித்து விட்டதாகவும், இதனை மீட்டு தர வேண்டும் என்றும், கண்ணப்பன் ரூ, 3 லட்சத்தை சிலர் மோசடி செய்து விட்டதாகவும் தீக்குளித்தனர். ஆனால் போலீசார் முன்கூட்டியே தடுத்து நிறுத்தினர். இது போல் வேலை வழங்க கோரி திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் அஜித்தா என்ற திருநங்கை தீக்குளிக்க முயற்சி செய்தார். அவரை தீயணைப்புத்துறை வீரர்கள் மீட்டு அழைத்து சென்றனர்.