![](admin/uploads/.6039050c4facb3.99343426.jpg)
Tuesday, 2nd July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
காஞ்சீபுரம்: காஞ்சீபுரத்தில் மாமல்லபுரம் அருகே கடற்கரை சாலையில் வேன் ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்த வழியே இரு சக்கர வாகனம் ஒன்று சாலையை கடந்து செல்ல முயன்றுள்ளது. இதில், வேன் அந்த வாகனம் மீது மோதி விபத்திற்குள்ளானது.
இந்த சம்பவத்தில் இரு சக்கர வாகனத்தில் பயணித்த ஒரு பெண் உள்பட 3 பேர் பலியாகி உள்ளனர். ஒருவர் காயமடைந்து உள்ளார். அவர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.