Thursday, 4th July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
புதுடெல்லி: டெல்லி விமான நிலையத்தில் லுப்தான்சா விமான சேவை நிறுவனத்தின் விமானி போல் ஆள்மாறாட்டம் செய்து, விமானத்தில் பயணிக்க முயன்ற நபரை போலீசார் கைது செய்தனர்.
ஏர் ஏசியா விமானத்தில் கொல்காத்தா செல்ல இருந்தவனை பார்த்து சந்தேகமடைந்த அந்நிறுவன ஊழியர்கள், லுப்தான்சா நிறுவனத்தை தொடர்பு கொண்டு விசாரித்த போது, அந்த நபர் பைலட் என கூறி ஆள்மாற்றாட்டம் செய்தது தெரிய வந்தது.
இதையடுத்து கைது செய்யப்பட்ட மோசடி நபரிடம் விசாரணை மேற்கொண்டதில், விமான நிலையத்தில் வரிசையில் நிற்பது உள்ளிட்டவற்றை தவிர்ப்பதற்காக, ஆள்மாறாட்டம் செய்ததை ஒப்புக் கொண்டுள்ளான்.
பாங்காக்கில் தயாரிக்கப்பட்ட போலி அடையாள அட்டையை வைத்து அந்த நபர், 15 முறைகளுக்கும் மேல் விமானியின் சலுகையுடன் விமானப் பயணம் மேற்கொண்டிருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.