Saturday, 28th September 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

சாத்வி பிரக்யா சிங் தாகூருக்கு அரசின் முக்கிய பதவி

நவம்பர் 21, 2019 09:21

புதுடில்லி : சர்ச்சை பேச்சுகளுக்கு பெயர் போன சாத்வி பிரக்யா சிங் தாகூருக்கு மத்திய பாதுகாப்பு துறைக்கான பார்லி., ஆலோசனை குழு உறுப்பினர் பதவி வழங்கப்பட்டுள்ளது.

மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையிலான 21 உறுப்பினர்களை கொண்டது பார்லி., ஆலோசனைக் குழு. இந்த குழுவில் எதிர்க்கட்சிகளை சேர்ந்த தலைவர்களும் உறுப்பினர்களாக உள்ளனர். காங்., கட்சியை சேர்ந்த பரூக் அப்துல்லா, சரத் பவார் உள்ளிட்டோரும் இந்த ஆலோசனைக் குழுவில் இடம்பெற்றுள்ளனர்.

இந்நிலையில் சர்ச்சைக்குரிய எம்.பி., என கூறப்படும் பிரக்யாவிற்கும் பாதுகாப்புத்துறைக்கான பார்லி., ஆலோசனை குழுவில் இடம் அளிக்கப்பட்டுள்ளது அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. சர்ச்சைக்குரிய பல கருத்துக்களை கூறி வருவதால் இவருக்கு பா.ஜ., தலைமை பலமுறை விளக்கம் அளிக்க நோட்டீஸ் அனுப்பி உள்ளதும், பிரதமர் உள்ளிட்ட தலைவர்கள் நேரடியாக கண்டிப்பு தெரிவித்ததும் குறிப்பிடத்தக்கது.

தலைப்புச்செய்திகள்