Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கவுகாத்தி: ஐஐடியில் ஜப்பான் மாணவர் தற்கொலை

நவம்பர் 22, 2019 01:12

கவுகாத்தி: கவுகாத்தி ஐஐடியில் ஜப்பானை சேர்ந்த மாணவர் தற்கொலை செய்து கொண்டார். கவுகாத்தி ஐஐடி, ஜப்பானின் ஜிபு பல்கலை இடையிலான மாணவர் பரிமாற்ற திட்டத்தின் கீழ், அந்த மாணவர், கடந்த 3 மாதத்திற்கு முன்னர் கவுகாத்தி ஐஐடிக்கு வந்தார். அவரது பயிற்சி காலம் நவ.,30 அன்றுடன் முடிகிறது. தொடர்ந்து, அவர், படித்த பல்கலைக்கு அவர் செல்ல வேண்டியிருந்தது.

இந்த சம்பவம் தொடர்பாக அதிகாரிகள் கூறுகையில்;

மாணவர் அறை நீண்ட நேரம் பூட்டப்பட்டு இருந்ததை கண்ட நண்பர்கள், அவரை அழைத்து பதில் கிடைக்காததால், ஐஐடி அதிகாரிகளுக்கு தகவல் சென்றது. பின்னர் போலீசார் உதவியுடன் கதவை உடைத்து சென்று பார்த்த போது, மாணவர், குளியல் அறையில் தற்கொலை செய்தது தெரியவந்தது. மாணவர் தற்கொலை தொடர்பாக, மத்திய உள்துறை மற்றும் வெளியுறவு அமைச்சகத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாணவரின் குடும்பத்திற்கு தகவல் தெரிவிக்கப்படும் என்று அந்த அதிகாரிகள் தெரிவித்தனர்.

தலைப்புச்செய்திகள்