Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

நித்யானந்தா பாஸ்போர்ட் எங்களிடம் இல்லை: போலீஸ்

நவம்பர் 22, 2019 01:30

அகமதாபாத்: குஜராத்தில் உள்ள நித்யானந்தா ஆசிரமத்தில், குழந்தைகள் கடத்தப்பட்டு சித்ரவதை செய்யப்படுவதாக புகார் வந்தது. இதனையடுத்து போலீசார் குழந்தைகளை மீட்டனர். நித்யானந்தா மீது குழந்தைகள் கடத்தல், சித்ரவதை செய்ததாக போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.இந்நிலையில், நித்யானந்தா தலைமறைவாகிவிட்டதாக குஜராத் போலீசார் தெரிவித்துள்ளனர். அவரை நாடு கடத்துவது தொடர்பாக மத்திய அரசின் உதவியை நாடியுள்ளனர்.

இந்நிலையில், நித்யானந்தா வழக்கை விசாரிக்கும் ஆமதாபாத் டிஎஸ்பி கமரியா கூறுகையில், நித்யானந்தா பாஸ்போர்ட் எங்களிடம் இல்லை. மாயமான பெண்களின் பாஸ்போர்ட்கள் மட்டுமே எங்களிடம் உள்ளது. அதில் ஒன்று காலாவதியாகிவிட்டது. இது தொடர்பாக வெளியுறவு அமைச்சகத்திடம் தகவல் தெரிவித்துள்ளோம், இவ்வாறு அவர் கூறினார்.

தலைப்புச்செய்திகள்