![](admin/uploads/.5e721d8236e2c5.29875759.jpg)
Monday, 1st July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
விழுப்புரம்: விழுப்புரத்தில் திமுக நிர்வாகி கழுத்தறுபட்ட நிலையில் சடலமாக கிடந்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், விழுப்புரத்தில் உள்ள ஒரு தனியார் உணவகத்திற்கு அருகே சாலை ஓரம் இருக்கும் பள்ளத்தில் ஆண் சடலம் ஒன்று கழுத்தறுப்பட்ட நிலையில் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் வந்துள்ளது. இதனையடுத்து, அங்கு வந்த போலீசார் சடலத்தை மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
விசாரணையில் உயிரிழந்தவர், விழுப்புரம் பூந்தோட்டம் பகுதியை சேர்ந்த பாலாஜி என்பதும், இவர் விழுப்புரம் 23 வது வார்டு திமுக செயலாளர் பொறுப்பில் முன்பு இருந்தவர் என்பதும் தெரியவந்தது.