Friday, 5th July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
கடலூர்: கடலூர் மாவட்டம், திருப்பாதிபுலியூரில் இரவு முழுவதும் கனமழை பெய்தது. அப்போது, நாராயணன் என்பவர் வீட்டின் சுவர் இடிந்து விழுந்தது. தகவல் அறிந்த தீயணைப்புத்துறையினர்,விரைந்து வந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் வீட்டில் இருந்த பச்சிளம் குழந்தை உட்பட 3 பேர் உயிரிழந்துள்ளனர். இடிபாடுகளில் சிக்கி இருந்த மேலும் 3 பேரை மீட்டு கடலூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு தீயணைப்புத்துறையினர் அனுப்பி வைத்தனர். பச்சிளம் குழந்தை உட்பட 3 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.