Sunday, 29th September 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
மும்பை: மராட்டிய சட்டப்பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் உத்தவ் தாக்கரே அரசு வெற்றி பெற்றது. 169 எம்எல்ஏக்கள் ஆதரவுடன் உத்தவ் தாக்கரே அரசு நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றது.
பெரும்பான்மைக்கு 145 எம்எல்ஏக்கள் தேவை என்கிற நிலையில் உத்தவ் தாக்கரேவுக்கு 169 எம்எல்ஏக்கள் ஆதரவு கிடைத்தது. நம்பிக்கை வாக்கெடுப்பை புறக்கணித்து பாஜக எம்எல்ஏக்கள் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்