Sunday, 30th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

தமிழ் கலாசாரத்தை புகழ்ந்து தள்ளிய ஜெ.பி.நட்டா

நவம்பர் 30, 2019 11:46

சென்னை: இன்று தமிழ்நாடு வந்திருந்த பாஜக தேசிய செயல்தலைவர் ஜெ.பி.நட்டா தொண்டர்கள் மத்தியில் உரையாற்றியபோது, தமிழ் கலாச்சாரம் இல்லாமல் இந்திய கலாச்சாரம் முழுமை பெறாது என்று தெரிவித்துள்ளார்.

பாரதிய ஜனதா கட்சியின் செயல் தலைவரான ஜெ.பி.நட்டா கட்சித் தொண்டர்களை சந்திக்கவும் ஊக்குவிக்கும் விதமாகவும் தமிழகத்துக்கு அரசியல் பயணம் வந்துள்ளார். 16 இடங்களில் புதிதாக பாஜகவின் கட்சி அலுவலகங்களுக்கான அடிக்கல் நாட்டு விழாவை முடித்த பிறகு தொண்டர்களுக்கு உரையாற்றினார்.

அவரது ஆங்கில உரையை. பாஜகவின் தேசிய செயலாளர்களில் ஒருவரான எச்.ராஜா மொழிபெயர்த்தார்.இதைப் பேசுவதற்கு முன்பு, தமிழ் தமிழர் குறித்தும் பேசினார். 

அதே போல கலியன் பூங்குன்றனார், திருவள்ளுவர் ஆகியவர்களைக் குறிப்பிட்டுப் பேசிய ஜெ.பி.நட்டா “தமிழ் கலாச்சாரம் இல்லாமல் இந்திய கலாச்சாரம் கிடையாது”என்று தெரிவித்தார். மேலும், “இதை நான் ஏதோ சொல்லவேண்டும் என்பதற்காக சொல்லவில்லை” என்றும் பேசினார்.

மேலும், தமிழ் உலகின் மிகமிகப் பழமையான மொழி. சேர சோழ பாண்டிய மன்னர்கள் ஆண்ட நிலம் இது. தொன்மையான கோயில்களை அதிகம் கொண்டுள்ள பூமி என்றும் புகழ்ந்து தள்ளினார்.

திருவள்ளுவர் அளித்த மகாகாவியமான திருக்குறள் ஒன்றே நாம் பெருமை கொள்ளப் போதுமான ஒன்று என்று அவர் தெரிவித்ததை, எச்.ராஜா மொழிபெயர்க்கும்போது இலக்கியம் என்று சரிப்படுத்தி மொழிமாற்று செய்தார்.

மேலும் தமிழ் மொழியின் பெருமையை உணர்ந்த பிரதமர் நரேந்திர மோடி இதை ஐ.நா பொதுஅவையில் யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற கனியன் பூங்குன்றனாரின் வரிகளைப் பேசினார் என்றும் ஜெ.பி.நட்டா தனது உரையின் போது தெரிவித்தார்.

தலைப்புச்செய்திகள்