![](admin/uploads/.5d63550b63dd38.87656657.jpg)
Tuesday, 2nd July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
சென்னை: சென்னையில் விடாமல் கனமழை பெய்து வருவதால் மக்களுக்கு உதவும் வகையில் தமிழக அரசு உதவி எண்களை அறிவித்து இருக்கிறது. சென்னையில் இப்போதைக்கு மழை விடுவதற்கு வாய்ப்பு கிடையாது. அடுத்த மூன்று நாட்களுக்கு சென்னையில் தீவிர கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
சென்னையில் கடந்த 3 மணி நேரத்திற்கும் மேலாக கனமழை பெய்து வருகிறது. முக்கியமாக இரவு நேரங்களில் அதிக அளவில் மழை பெய்கிறது. இந்த நிலையில் சென்னையில் மழை தொடர்பான பாதிப்புகளில் இருந்து நிவாரணம் பெறுவதற்காக உதவி எண்கள் அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
மக்கள் வெள்ளத்தில் மாட்டிக்கொண்டு இருந்தாலோ, மருத்துவ உதவிக்கள் தேவைப்பட்டாலோ உதவி செய்வதற்கு இந்த எண்கள் அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி சென்னையியில் 044-25384520, 044-25384530, 044-25384540 உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் உதவி தேவைப்படும் மக்கள் இந்த எண்ணை தொடர்பு கொள்ளலாம். இது தமிழக அரசின் இலவச சேவை என்பது குறிப்பிடத்தக்கது.