Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

தூத்துக்குடி: ரயில் தண்டவாளம் நீரில் மூழ்கியுள்ளதால் ரயில் நிறுத்தம்

டிசம்பர் 01, 2019 01:14

தூத்துக்குடி: தூத்துக்குடியில் நேற்று இரவு முழுவதும் பெய்த கனமழை காரணமாக நகரின் பல்வேறு பகுதிகளில் நீர் தேங்கி உள்ளது.

தூத்துக்குடி பழைய மாநகராட்சி, பாலவிநாயகர் சிலை, அந்தோணியார் கோவில் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழை நீர் வெள்ளம் போல் தேங்கி உள்ளது.

தூத்துக்குடி ரயில் நிலையத்தில் தண்டவாளங்கள் மழை நீரில் மூழ்கியுள்ளதால், கோவை எக்ஸ்பிரஸ் ரயில், மேலூர் ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டு பயணிகள் இறக்கிவிடப்பட்டனர்.

தலைப்புச்செய்திகள்