Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

தமிழகத்தின் சில இடங்களில் நாளைக்கும் மிக கனமழை

டிசம்பர் 02, 2019 08:26

சென்னை: தமிழ்நாடு, புதுச்சேரியில் வடகிழக்கு பருவமழை வலுவடைந்து வரும் நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் பெரும் பகுதிகளில் நல்ல மழைப் பொழிவு ஏற்பட்டுள்ளது.

தமிழ்நாடு, புதுச்சேரியில் கடந்த 24 மணி நேரத்தில் 17 இடங்களில் கனமழையும், மூன்று இடங்களில் மிக கனமழையும் பெய்துள்ளது. தமிழ்நாட்டில் அதிகபட்சமாக மேட்டுப்பாளையத்தில் 18 சென்டி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. குன்னூரில் 13 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

தற்போது தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் இலங்கை மற்றும் அதனை ஒட்டியுள்ள தென் தமிழக கடற்கரையோரப் பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை நிலவுகிறது. தென்மேற்கு அரபிக் கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவுகிறது. 

அடுத்த 24 மணி நேரத்தில் தென் தமிழ்நாட்டில் பரவலாக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. வட தமிழ்நாட்டில் ஒரு சில இடங்களில் கனமழை காண வாய்ப்புள்ளது. நீலகிரி, கடலூர், அரியலூர், பெரம்பலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுச்சேரி, திண்டுக்கல், தேனி, திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்யக்கூடும். 

அடுத்த 24 மணி நேரத்தில் சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும் என அறிவிறுத்தப்பட்டுள்ளது. 

தலைப்புச்செய்திகள்